search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் ஆர்வம்"

    • மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்ய பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இந்த முதற்கட்ட முகாம் வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மகளிர் உரிமைத் தொகைக்கு கமுதி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்ப படிவங்கள், ரேசன் கடைகளில் பெற்று கடந்த 24-ந் தேதி முதல் வழங்கப்பட்டது.

    கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு பகுதி மற்றும் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் என 2 இடங்களில், இதற்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் தங்களது உரிமைத் தொகையை பெறுவதற்கான மனுக் களை கொடுத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    வருவாய் ஆய்வாளரும், மண்டல அலுவலருமான மணி வல்லபன் முன்னிலையில், தன்னார்வலர்கள், பொறுப்பு அலுவலர்களும் இந்த மனுக்களை பெற்று பதிவேற்றம் செய்து வருகின்றனர். தற்போது வரை 1500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட முகாம் வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    மேலும் கிராம பகுதியில் உள்ள பெண்களுக்காக பசும்பொன், செங்கப்படை, பாக்குவெட்டி, மரக்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் மொத்தம் 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மகளிர் உரிமைத் தொகைகாண மனுக்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

    • ஆலங்குடி பகுதியில் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர்
    • கடைவீதிகள் மற்றும் காய்கறி மார்க்கெட் வீதியில் விற்பனையாகும் அகல் விளக்குகளையும் அவற்றை பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்

    புதுக்கோட்டை:

    கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அனைவரும் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

    கடந்த சில ஆண்டுகளாக மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்குவதிலும், பாரம்பரிய முறைப்படி அதில் எண்ணை ஊற்றி, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது அதிகரித்துள்ளது

    இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கடைவீதிகளில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அகல் விளக்கு வியாபாரம் சூடு பிடித்தது. இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து வருவதால் அகல் விளக்கு தயாரிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்ட போதிலும் அதிக அளவில் அகல் விளக்குகள் வாங்குவதில் மக்கள் காட்டும் ஆர்வம் விற்பனையையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    தொடர் மழையால் மிகக்குறைந்த அளவே அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த வருடங்களில் ரூ.10-க்கு 15 விளக்குகள் வரை வழங்கப்பட்டன. ஆனால் இவ்வாண்டு ஐந்து அல்லது ஆறு விளக்குகள் வழங்கப்படுகிறது.

    அகல் விளக்குகளில் மெழுகு விளக்குகளும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் மரபுப்படி களி மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்ற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேலும் களிமண் அகல் விளக்குகளை வாங்குவது இத்தொழில் ஈடுபட்டிருக்கும் ஏழை தொழிலாளர்களின் வாழ்வில் விளக்கு ஏற்றுவதற்கு ஒப்பாகும் என்பதால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இன்று தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று மழையூர், துவார், வாடிமனைபட்டி, மாங்குடி ஆகிய ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்டு ஆலங்குடி கடைவீதிகள் மற்றும் காய்கறி மார்க்கெட் வீதியில் விற்பனையாகும் அகல் விளக்குகளையும் அவற்றை பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    ×